புவியியல் குறிகாட்டி என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட இடத்தில் (நாடு அல்லது நாட்டில் ஓரிடம்) மூல உற்பத்தியாக இருப்பதன் காரணமாக அந்த பொருட்களுக்கு விசேட தரம், பண்பு அல்லது மதிப்பு என்பவற்றை சுட்டிக்காட்டுகிற பொருளின் மீது பயன்படுத்துகிற பெயர் அல்லது அடையாளம். (இலங்கைத் தேயிலை, இலங்கைக் கறுவா, இலங்கை இரத்தினக்கல், நுவரெலியா தேயிலை, றுகுணு தயிர் போன்றவை)

ஏன் பாதுகாக்கப்படுகிறது?

குறித்த பொருள் தரத்தின், பண்பின், மதிப்பின் அடையாளத்தைக் கொண்டிருப்பதால் வியாபார ரீதியில் அது மிகவும் பயனளிக்கிறது. அதை தவறாகப் பயன்படுத்துவது அல்லது துஷ்பிரயோகம் செய்வது புவியியல் குறிகாட்டியின் உரிமையாளர் மற்றும் நுகர்வோர் ஆகிய இருவருக்கும் தீங்கு விளைவிக்கலாம்.

வியாபாரச் சின்னம் எதிர் புவியியல் குறிகாட்டி

இது பல்வேறு தொழில் முயற்சியில் பண்டங்களை அல்லது சேவைகளை அடையாளப்படுத்துவதற்கு ஒரு சின்னம் உதவுகிறது. புவியியல் குறிகாட்டி  நுகர்வோருக்கும் வர்த்தகர்களுக்கும் அந்த உற்பத்தி குறிப்பிட்ட இடத்தை மூல இடமாகக் கொண்டிருக்கிறது மற்றும் அதற்கு சில விசேட தரம், பண்பு அல்லது மதிப்பு உண்டு என்பதை சுட்டிக்காட்டுகிறது.

எப்படி பாதுகாக்கப்படுகிறது?

ஒரு குறிப்பிட்ட பொருள் அதன் குறிப்பிட்ட மூல இடத்தைக் கொண்டிருக்காவிட்டால் அதைப் பயன்படுத்துவதைத் தடுப்பதன் மூலம் புவியியல் குறிகாட்டியை சட்டம் பாதுகாக்கிறது. அதை பயன்படுத்துவதை நிறுத்தும்படி நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்கலாம். இலங்கையில் புவியியல் குறிகாட்டி பதிவுசெய்யாமலே பாதுகாக்கப்படுகிறது. மேலும் புவியியல் குறிகாட்டி அநீதியான போட்டி, சான்றுப்படுத்தப்பட்ட சின்னங்கள் மற்றும் கூட்டுச் சின்னங்கள் என்பவற்றை சட்டத்தின் கீழ் பாதுகாக்கிறது. புவியியல் குறிகாட்டியைப் பொறுத்தவகையில் பிறழ்கூற்றும் ஒரு குற்றமாகும்.

சட்டத்தின் திருத்தங்கள் அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து புவியியல் குறிகாட்டியை இலங்கையில் விசேடமாக புவியியல் குறிகாட்டியாகப் பதிவுசெய்யப்படுகிறது. இது 2017ஆம் ஆண்டு ஆரம்பமாகும்.

வெளிநாட்டில் பாதுகாத்தல்

இலங்கையின் புவியியல் குறிகாட்டியை உலக வர்த்தக அமைப்பின் அங்கத்துவ நாடுகள் அனைத்திலும் அந்தந்த நாடுகளின் தேசிய சட்டத்தின் கீழ் பாதுகாக்க முடியும். (உதா: புவியியல் குறிகாட்டி இந்தியாவில் புவியியல் குறிகாட்டி சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்படுகிறது. அமெரிக்காவில் குறியீட்டு சான்றிதழாகப் பதிவுசெய்யப்படுகிறது)

கைத்தொழில் வடிவமைப்புகள் என்றால் என்ன?

இது ஒரு கட்டுரையின் அலங்கார அல்லது அழகிய விடயமாகும். அதற்கு செயற்பாட்டுப் பண்புகள் எதுவும் இல்லை. ஓரு வடிவமைப்பு, ஒரு கட்டுரையின் வடிவம் (விளையாட்டுப்பொருள், போத்தல், ஆபரணம் அல்லது கதிரை போன்றவை) மூன்று பரிமாணங்களைக் கொண்டிருக்க முடியும். மேலும் மாதிரி அல்லது கோடுகள் போன்ற இரண்டு பரிமாணங்களைக் கொண்டிருக்கும். (வாழ்த்து அட்டைக்கான வடிவமைப்பு போன்றவை)

பாதுகாக்கப்பட்ட வடிவமைப்புகள்

ஒரு வடிவமைப்பு புதியதாக இருந்தால் அது பாதுகாக்கப்படுகிறது. அத்துடன், அது மோசமான வடிவமைப்பாக அல்லது ஒழுக்கக் கட்டுப்பாட்டுக்கு, பொதுமக்கள் ஒழுங்கு, பொதுமக்கள் ஆர்வத்திற்கு முரண்பட்டதாக இருத்தலாகாது. ஒரு வடிவமைப்பு பதிவுக்காக முன்வைக்கப்படுகின்ற திகதிக்கு முன்னர் உலகின் எந்த பாகத்திலும் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடியதாக இருக்காவிட்டால் அது புதிய வடிவமைப்பாக கருதப்படுகிறது.

அவை எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன?

அவை புலமைச் சொத்து அலுவலகத்தில் பதிவுசெய்யப்படுவதன் மூலம் பாதுகாக்கப்படுகின்ற. பதிவுசெய்யப்பட்ட வடிவமைப்பு ஐந்து வருடங்களுக்குப் பாதுகாக்கப்படுகிறது. அத்துடன் மேலும் ஐந்து வருடங்களுக்கு இரண்டு தடவை புதுப்பிக்க முடியும். தகுந்த கட்டணங்களுடன் புலமைச் சொத்து அலுவலகத்திற்கு D1 படிவத்தைப் பயன்படுத்தி தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க முடியும். (ஒழுங்குவிதிகளைப் பார்க்கவும்)

உரிமைகள்

ஒரு வடிவமைப்பின் உரிமையாளர், தயாரித்தல், பயன்படுத்துதல், இறக்குமதி செய்தல் மற்றும் அவற்றை உபயோகித்துள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தல் ஆகிய தனித்துவமான உரிமைகளைக் கொண்டிருக்கிறார்.

ஏன் அவை பாதுகாக்கப்படுகின்றன?

கைத்தொழில் வடிவமைப்பு பொருட்களை கவர்ச்சிகரமாக்குகிறது. அதனால் அதன் பெறுமதி அதிகரிக்கிறது. அத்துடன் அதை சந்தைப்படுத்தக்கூடியதாகவும் இருக்கிறது. இப்பாதுகாப்பு உருவாக்குனர் பயன்பெறுவதை உறுதிப்படுத்துகிறது. அத்துடன் முதலீட்டையும் மேம்படுத்துகிறது. அவை, கைத்தொழில், கைப்பணிப்பொருட்கள் பரவலாக விரிவடைவதை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்கிறது. அத்துடன் அதிக தொழில் வாய்ப்புகளை உருவாக்குகிறது.

வெளிநாட்டில் பதிவுசெய்தல்

வடிவமைப்புகளைப் பதிவுசெய்தல் இலங்கையில் மாத்திரம் செல்லுபடியாகும். உரிமையாளர் அந்த வடிவமைப்பை வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்தினால் அந்த நாடுகளில் பதிவுசெய்துகொள்ளுவது நல்லது. பாதுகாப்பு தேவைப்படுகின்ற நாட்டில் அந்த நாட்டுச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும். எவ்வாறாயினும் கைத்தொழில் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக அதன் அங்கத்துவ நாடுகளில் பாரிஸ் உடன்படிக்கையின் கீழ் முன்னுரிமையளிக்கும்படி கோர முடியும். (இலங்கையில் புலமைச்சொத்து அலுவலகத்திற்கு விண்ணப்பித்த திகதியிலிருந்து 6 மாதங்களுக்குள்)

ஆக்கவுரிமை தயாரிக்கப்படுவது ஏன்?

ஆக்கவுரிமை புத்தாக்கங்களை பாதுகாப்பதை உறுதிப்படுத்துகிறது. அத்துடன் அதனால் ஏற்படும் நன்மைகளை புத்தாக்குனர்கள் பெற்றுக்கொள்ளுவதை உறுதிப்படுத்துவதன் ஊடாக புத்தாக்குனர்களுக்கு ஊக்குவிப்பு அளிக்கப்படுகின்றது. அத்துடன் மேலும் புத்தாக்கங்களுக்கு ஊக்கமளிக்கிறது. இது பொருளாதார அபிவிருத்தியையும் தொழில்நுட்ப அபிவிருத்தியையும் ஊக்குவிக்கிறது. ஆக்கவுரிமை ஆவணங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. தேவையானவர்கள் அவற்றைப் பார்வையிட முடியும். அவற்றில் ஆய்வாளர்கள், புத்தாக்குனர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்கள் ஆகியோருக்குத் தேவையான நிறைய தகவல்கள் இருக்கின்றன. புதிய அபிவிருத்திகள், R&D நடவடிக்கைகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் என்பவற்றை தொடர்ந்து செயற்படுத்த முடியும்.

ஆக்கவுரிமை என்றால் என்ன?

புத்தாக்குனருக்கு ஏகபோக உரிமைக்காக அரசு ஆக்கவுரிமையை வழங்குகிறது. உதாரணமாக: மற்றவர்கள் அதைத் தயாரிப்பதை தடுப்பதற்கு, ஆக்கவுரிமை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட திகதியிலிருந்து 20 வருடங்களுக்கு தரமான புத்தாக்கங்களை மற்றவர்கள் பயன்படுத்துவதையும் விற்பனை செய்வதையும் தடுப்பதற்காக அரசு இந்த ஆக்கவுரிமையை வழங்குகின்றது. இந்த ஆக்கவுரிமையின் உரிமையாளர் அவர் ஆக்கவுரிமை பெற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும், விற்க முடியும் அல்லது நிதிசார்ந்த பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

புத்தாக்கம் என்றால் என்ன?

புத்தாக்கம் என்பது தொழில்நுட்பத் துறையில் உள்ள பிரச்சினைக்கு ஒரு செயல்முறைத் தீர்வாகும். ஒரு புத்தாக்கம் ஓர் உற்பத்திக்கு அல்லது ஒரு நடவடிக்கைமுறைக்கு தொடர்புபடலாம்.

ஆக்கவுரிமை பெறுவதால் என்ன செய்ய முடியும்?

ஒரு புத்தாக்கம் (அ) புதியதாக (தற்பொழுதுள்ள அறிவுக்குத் தெரியாதவை) (ஆ) கைத்தொழில் ரீதியாகப் பயன்படுத்தக்கூடிய (செயற்படக்கூடிய மற்றும் இயங்கக்கூடிய) மற்றும் (இ) புத்தாக்கப் படிமுறையில் சம்பந்தப்படுகின்ற (அபிவிருத்தி அல்லது முன்னேற்றம் ஒரு குறிப்பிட்ட துறையில் சராசரித் திறமையுள்ள ஒரு நபருக்கு தெளிவுபடாதது) ஆக்கவுரிமை அளிக்கப்பட்ட பெறுமதியான ஒரு புத்தாக்கத்தின் மேம்பாட்டுக்கு ஓர் ஆக்கவுரிமை வழங்கப்படலாம். ஆனால் அது பயன்படுத்தப்படுகின்றபோது முதலாவது ஆக்கவுரிமை உரிமையாளரின் உரிமையை மீறுவதற்கான சாத்தியமுண்டு. அதனால் உபயோகிப்பதற்கு முன்னர் முதலாவத ஆக்கவுரிமை வைத்திருப்பவருடன் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லது.

ஆக்கவுரிமை எப்படி வழங்கப்படுகின்றது?

P1 எனக் குறிப்பிடப்பட்டுள்ள (ஒழுங்குவிதிகளைப் பார்க்கவும்) படிவத்தைப் பயன்படுத்தி புலமைச் சொத்து அலுவலகத்திற்கு ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும். விண்ணப்ப படிவத்துடன் புத்தாக்கத்தை முழுமையாக, தெளிவாக விபரிக்கின்ற ஆவணத்தை குறிக்கப்பட்ட கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். (ஒழுங்குவிதிகளைப் பார்க்கவும்) சர்வதேச தேடல் அதிகார சபையினால் (ISA) தயாரிக்கப்பட்ட தேடல் அறிக்கை அல்லது மாற்றீடாக விண்ணப்பதாரர் தேடல் அறிக்கைக்காக உள்ளூர் பரிசோதகரை அமர்த்தும்படி புலமைச் சொத்து அலுவலகத்தைக் கேட்டுக்கொள்ளலாம்.

புலமைச் சொத்து அலுவலகம் புலமைச் சொத்து சட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்யும். தேடல் அறிக்கையுடன் முறைசார்ந்த தேவைகள்  நிறைவேற்றப்படுமானால் ஆக்கவுரிமை வழங்கப்படும். ஆக்கவுரிமை வழங்குவதற்கு முன்னர் புத்தாக்கம் வெளியிடப்படலாம்.(சர்வதேச வகையிலான தேடல் அறிக்கை கிடைக்காவிட்டால்)

புதுப்பித்தல்

ஆக்கவுரிமை பதியப்பட்ட திகதியிலிருந்து 20 வருடங்களுக்குச் செல்லுபடியாகும். ஆக்கவுரிமை வழங்கப்பட்ட திகதியிலிருந்து இரண்டாவது வருடத்திலிருந்து ஆக்கவுரிமையை கட்டணம் செலுத்தி புதுப்பித்துக்கொள்ள வேண்டும். (கட்டணக் கட்டமைப்புக்கு தயவுசெய்து ஒழுஙங்குவிதியைப் பார்க்கவும்).

ஆக்கவுரிமைக்குட்படுத்தப்படாதவைகள் யாவை?

(i) கண்டுபிடிப்புகள், விஞ்ஞானக் கோட்பாடுகள் மற்றும்  கணித முறைகள்.

(ii) தாவரங்கள், மிருகங்கள், மரபணு நுண்ணுயிர்களைத் தவிர்த்து ஏனைய நுண்ணுயிர்கள், மற்றும் உயிரியல் அற்ற மற்றும் சிற்றின உயிரியல் நடைமுறைகள் தவிர்த்து மிருகங்களையும் தாவரங்களையும் உற்பத்தி செய்வதற்கான கடடாய உயிரியல் நடைமுறை.

(iii) திட்டங்கள், சட்டங்கள் அல்லது வியாபாரம் செய்யும் முறைகள், முழுமையாக உள நடவடிக்கைகளை செயலாற்றுகிற அல்லது விளையாட்டுகளை விளையாடுகின்றவை.

(iv) மனித உடம்பில் அல்லது மிருகத்தின் உடம்பில் சத்திரசிகிச்சை செய்கின்ற அல்லது சிகிச்சை அளிக்கும் முறைகள் அல்லது தசை பிடித்துவிடும் சிகிச்சை, மனித உடம்பில் மிருகத்தின் உடம்பில் மேற்கொள்ளுகின்ற நோயறியும் முறைகள்.

(v) பொதுமக்கள் ஒழுங்கு, நன்னெறி உட்பட மனிதனின், மிருகத்தின் அல்லது தாவரத்தின் வாழ்க்கை, சுகாதாரம் அல்லது இயற்கைக்கு கடுமையான மூட நம்பிக்கைகளைத் தவிர்த்தல் என்பவற்றைப் பாதுகாப்பதற்குத் தேவையான புத்தாக்கங்கள்.

நாட்டுக்கு வெளியே புத்தாக்கத்தைப் பாதுகாப்பது எப்படி?

ஓர் ஆக்கவுரிமை அது வழங்கப்பட்ட நாட்டில் மாத்திரம் செல்லுபடியாகும். கைத்தொழில் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான பாரிஸ் சமவாயத்தில் இலங்கை அங்கத்தவராக இருப்பதனால், இலங்கையர்கள் பாரிஸ் சமவாயத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற ஏதேனும் ஒரு நாட்டில் அந்த நாட்டின் தேசிய சட்டத்தின் கீழ் அவர்களுடைய புத்தாக்கங்களுக்கு ஆக்கவுரிமையைப் பெற்றுக்கொள்ள முடியும். பெரும்பாலும் எல்லா நாடுகளும் இந்த சமவாயத்தில் அங்கம் வகிக்கின்றன. விண்ணப்பதாரர் அங்கத்துவ நாட்டில் கைத்தொழில் சொத்தைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்கு பாரிஸ் சமவாயத்தின் கீழ் முன்னுரிமையளிக்கும்படி கோர முடியும். அதாவது ஏனைய அங்கத்துவ நாட்டில் விண்ணப்பித்த ஆரம்ப திகதியிலிருந்து செல்லுபடியாகும். (இலங்கையில் விண்ணப்பித்த 1 வருடத்திற்குள் விண்ணப்பித்திருந்தால்)

ஜெனீவாவில் உள்ள உலக புலமைச்சொத்து அமைப்பினால் (WIPO) நிருவகிக்கப்படுகின்ற  ஆக்கவுரிமை கூட்டுறவு ஒப்பந்தத்தின் கீழ் PCT அனைத்து இலங்கைப் பிரசைகள் அல்லது இலங்கையில் குடியிருக்கின்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். நீங்கள் ஓரு விண்ணப்ப படிவத்தை நிரப்புவதன் மூலம் பல நாடுகளில் (ஆக்கவுரிமை கூட்டுறவு ஒப்பந்தத்தின் கீழ் PCT அங்கத்துவம் வகிக்கும் நாடுகள்) ஆக்கவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரி பின்னர் தேசிய விண்ணப்பமாக சமர்ப்பிக்க விரும்பும் நாடுகளை ஆக்கவுரிமை கூட்டுறவு ஒப்பந்தத்தில் PCT குறிப்பிட வேண்டும். பல நாடுகளில் பல விண்ணபப்ங்களைத் தயாரிப்பதை விட ஆக்கவுரிமைக் கூட்டுறவு ஒப்பந்தம் PCT இலகுவான நடைமுறையாகும். வசிக்கின்ற நாட்டில் விண்ணப்பிக்கின்ற விண்ணப்பத்தைப்போலவே ஆக்கவுரிமை கூட்டுறவு ஒப்பந்தத்தின் கீழ் PCT உள்ள விண்ணப்பமும் இருக்கின்றது. (மேலதிக விபரங்களுக்கு www.wipo.int இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கவும்)

வியாபாரச் சின்னம் என்றால் என்ன?

ஒரு சின்னம் - வியாபாரச் சின்னம் அல்லது சேவை சின்னம் - பல்வேறு தொழில் முயற்சிகளில் பண்டங்களை அல்லது சேவைகளை அடையாளம் காண்பதற்கு கண்ணுக்குப் புலப்படும் அடையாளமாகும். வியாபாரச் சின்னம் பண்டங்களையும் சேவை சின்னம் சேவைகளையும் குறிக்கிறது. அத்துடன், இன்னும் இரண்டுவகைச் சின்னங்கள் இருக்கின்றன. அவை சான்றுப்படுத்தல் சின்னங்கள் மற்றும் கூட்டுச் சின்னங்கள் என்பவையாகும். சான்றுப்படுத்தல் சின்னம் என்பது ஒரு பொருளின் அல்லது சேவையின் தரத்தை வரைவிலக்கணப்படுத்துகிறது. இதை மற்றவர்கள் பயன்படுத்துவதற்கு இந்தச் சின்னத்தின் உரிமையாளரால் அதிகாரமளிக்கப்படுகிறது. கூட்டுச் சின்னம் என்பது பதிவுசெய்யப்பட்ட உரிமையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் சின்னத்தைப் பயன்படுத்துகின்ற  பல்வேறு தொழில் முயற்சிகளின் பண்டங்களின் அல்லது சேவைகளின் பொதுவான பண்புகளை அடையாளம் காண்பதற்கான சின்னமாகும்.

ஒரு குறியீட்டை உருவாக்குவது எது?

ஒரு சின்னம், சொல், குறியீடு, அடையாளம், எழுத்துக்கள், எண்கள், ஒரு பெயர், குடும்பப் பெயர் அல்லது புவியியல் பெயர், வர்ணங்களின் கலவை அல்லது வர்ணங்களின் ஒழுங்கு, பண்டங்களின் வடிவம் அல்லது உள்ளடக்கம் போன்றவற்றைக் கொண்டிருக்கும். கண்ணுக்குப் புலப்படக்கூடிய அடையாளம் எப்பொழுதும் பல்வேறு தொழில்முயற்சிகளின் பண்டங்களை அல்லது சேவைகளை அடையாளம் காணக்கூடியதாக இருக்க வேண்டும். (அது தெளிவாக இருக்க வேண்டும்)

சின்னத்தின் செயற்பாடுகள்

அது பின்வருமாறு பல செயற்பாடுகளைக் கொண்டிருக்கிறது:-

  • பண்டங்கள் அல்லது சேவைகள் அதன் உரிமையாளரை ஏனையேரிடமிருந்து அடையாளப்படுத்துகிறது.;
  • பண்டங்கள் அல்லது சேவைகளின் மூலத்தை சுட்டிக்காட்டுகிறது;
  • உரிமையாளரின் பண்டங்களை அல்லது சேவைகளை தனித்துவமானதாக்குகிறது;
  • உரிமையாளர் வாடிக்கையாளரை அடையக்கூடியதாக இருக்கிறது;
  • சந்தை போன்ற இடங்களில் நுகர்வோர் தெரிவுசெய்வதற்கு உதவுகிறது.

பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்படாத சின்னங்கள்

பதிவுசெய்யப்பட்ட சின்னம், சட்டத்தின் கீழ் தேசிய புலமைச் சொத்து அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்ட சின்னமாகும். நீங்கள் பதிவுசெய்யாமல்கூட ஒரு சின்னத்தைப் பயன்படுத்த முடியும். பதிவுசெய்யப்படாத சின்னங்களை நியாயமற்ற போட்டிகள் சட்டம் அல்லது அனுமதிப்பதற்கான பொது சட்டத்தின் கீழ் பாதுகாக்க முடியும்.

ஏன் பதிவுசெய்யப்படுகிறது?

நீங்கள் உங்கள் சின்னத்தைப் பதிவுசெய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு சின்னத்தைப் பதிவுசெய்வது உரிமையாளருக்கு அதை பயன்படுத்துவற்கு, ஈடுபடுத்துவதற்கு மற்றும் அதிகாரமளிப்பதற்கு  தனித்துவமான உரிமையை வழங்குகிறது. நீங்கள் இதை சிவில் நீதிமன்றத்தின் அல்லது குற்றவியல் நீதிமன்றத்தின் அல்லது அவையிரண்டின் ஊடாகவும் இந்த உரிமைகளை இலகுவாகவும் வினைத்திறன்மிக்கவகையிலும் செயற்படுத்த முடியும். மற்றவர்கள் உங்களுடைய சின்னத்தை மற்றவர்கள் பயன்படுத்துவதை அல்லது அதையொத்த சின்னத்தைப் பயன்படுத்துவதை தடுக்க முடியும்.  உங்களுக்கு இழப்பீடு கோருவதற்குக்கூட உரித்துண்டு.

பதிவுசெய்யக்கூடிய சின்னங்கள்

2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்து சட்டத்தின் 103 மற்றும் 104 ஆகிய பிரிவுகளின் கீழ் ஏல்தகவற்றதாக இருத்தலாகாத சின்னங்களைப் பதிவுசெய்ய முடியும். ஒரு சின்னம் உதாரணமாக, குறித்த பண்டங்கள் சேவைகளை விபரிக்காவிட்டால், அது உங்களுடைய பண்டங்களை அல்லது சேவைகளை மற்றவற்லிருந்து அடையாளப்படுத்தாவிட்டால் மற்றும் ஏனைய ஜனரஞ்சகமான சின்னங்களை ஏனைய பதிவுசெய்யப்பட்ட சின்னங்களை ஒத்ததாக இருந்தால் அது அனுமதிக்கப்படாத சின்னமாக இருக்கும்.

பதிவு நடவடிக்கைமுறையின் பாய்வு வரைபடம்

பதிவுசெய்வது எப்படி?

A1 படிவத்தைப் பயன்படுத்தி விண்ணப்பத்தைத் தயாரிக்கவும். விண்ணப்பத்தைத் தயாரிக்கும் பணியில் பல படிமுறைகள் இருக்கின்றன. சின்னம் முறைசார்ந்த தேவைகளுடன் இணங்கியொழுகுகின்றதா என்பதைப் பரிசோதிக்கப்படுகிறது. அத்துடன் அது சட்டத்தின் 103 மற்றும் 104 ஆகிய பிரிவுகளின் கீழ் அனுமதியளிக்கப்படாததாக இருக்கின்றதா என்பதும் பரிசோதிக்கப்படுகிறது. புலமைச் சொத்து அலுவலகம் அதை மறுத்தால் நீங்கள் அந்த தீர்மானத்திற்கு எதிராக விடயங்களைச் சமர்ப்பிக்க முடியும். அல்லது மறுக்கப்பட்ட திகதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் விசாரிக்கும்படி கேட்க முடியும். அது மேலும் மறுக்கப்பட்டால் நீங்கள் நீதிமன்றத்தில் அந்த தீர்மானத்தை சவாலுக்குட்படுத்த முடியும்.(வாணிப மேல் நீதிமன்றம்)

சின்னம் முதலில் வர்த்தமானியில் வெளியிடுவதற்காக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வெளியிட்டதன் பின்னர் எதிர்ப்பு தெரிவிப்பதற்காக பொதுமக்களுக்கு மூன்றுமாதகால அவகாசம் வழங்கப்படுகின்றது. ஏதேனும் எதிர்ப்பு இருந்தால், புலமைச்சொத்து அலுவலகம் அதன் பிரதியொன்றை விண்ணப்பதாரருக்கு அனுப்பிவைக்கும். அந்த எதிர்ப்புக்கு எதிராக விண்ணப்பதாரர்களின் நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும் என கோரப்படும். அதன் பின்னர் புலமைச்சொத்து சபை ஒரு விசாரணையை நடத்தும். தேவைப்பட்டால் அதன்போது விண்ணப்பதாரர் மற்றும் எதிர்ப்பு தெரிவித்தவர் ஆகிய இருவருடைய பங்கேற்புடன் விசாரணையை நடத்தும். விசாரணையின் பின்னர் சின்னம் ஏற்றுக்கொள்ளப்படலாம் அல்லது மறுக்கப்படலாம். அது மறுக்கப்பட்டால் விண்ணப்பதாரர் அந்த தீர்மானத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தலாம். அது ஏற்றுக்கொள்ளப்பட்டால் பதிவு கட்டணத்தைச் செலுத்தியதன் பின்னர் பதிவுசெய்யப்படும். (தயவுசெய்து சட்டத்தின் V பகுதியையும் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளையும் பார்க்கவும்)

யார் பதிவுசெய்ய முடியும்?

எவரேனும் ஒரு நபர் அல்லது பல நபர்களைக் கொண்ட கூட்டுத்தாபனம் மற்றும் தனி கூட்டமைப்பு. (தனிப்பட்டவர்கள், கம்பனி, பங்காண்மை, சங்கம் போன்றவை).

கட்டணங்கள்

தயவுசெய்து கட்டண அட்டவணையைப் பார்க்கவும்.

செல்லுபடியான காலமும் புதுப்பித்தலும்

பதிவு விண்ணப்பித்த திகதியிலிருந்து 10 வருடங்களுக்கு செல்லுபடியாகும். அத்துடன் கட்டணம் செலுத்துவதன் மூலம் மேலும் 10 வருடங்களுக்கு புதுப்பிக்கப்படுகிறது. கட்டணங்களுக்கு தயவுசெய்து கட்டண அட்டவணையைப் பார்க்கவும்.

வெளிநாட்டில் பாதுகாத்தல்

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட சின்னங்கள் இலங்கையில் மட்டும் செல்லுபடியாகும். விண்ணப்பதாரர் ஏனைய நாடுகளில் வியாபாரம் செய்தால் சின்னத்தை அந்த நாடுகளில் பதிவுசெய்வது நல்லது. விண்ணப்பதாரர் குறித்த தேசிய சட்டத்தின் கீழ் பாதுகாப்பைத் தேடினால் ஒவ்வொரு நாட்டிலும் விண்ணப்பிக்க வேண்டும். (இலங்கை மெட்ரிட் முறைமையில் அங்கத்துவ நாடு அல்ல. அதனால் விண்ணப்பதாரர் சின்னத்தைப் பதிவுசெய்ய விரும்புகிற எல்லா நாடுகளையும் குறிப்பிட்டு சர்வதேச விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்) எவ்வாறாயினும், பாரிஸ் உடன்படிக்கையின் கீழ் அதன் அங்கத்துவ நாடுகளில் கைத்தொழில் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக முன்னுரிமை கோர முடியும். (இலங்கையில் விண்ணப்பித்த திகதியிலிருந்து 6 மாதங்களுக்குள்)

வியாபாரப் பெயர்கள்

வியாபாரப் பெயர் என்பது ஒரு பெயரின் கீழ் ஒரு நபர் செய்கின்ற வியாபாரமாகும் - விண்ணப்பதாரரின் பெயர், பங்காளர்களின் பெயர் போன்றவை. புலமைச் சொத்து சட்டத்தின் கீழ் வியாபாரப் பெயர்களைப் பாதுகாக்க முடியும். எவ்வாறாயினும், அதைக் குறியீடாக மாத்திரம் பதிவுசெய்ய முடியும். அந்தவகையில், வியாபாரப் பெயரை ஒரு குறியீடாகப் பதிவுசெய்வது நல்லது.

முகவர்கள்

பதிவுசெய்யப்பட்ட புலமைச்சொத்து முகவர்கள் இருக்கின்றனர். அவர்கள் விண்ணப்பங்களை விண்ணப்பதாரியின் சார்பில் பொறுப்பேற்க முடியும் அல்லது விண்ணப்பதாரியின் சார்பில் பதிவுசெய்ய முடியும். அத்துடன் ஆக்கவுரிமை மற்றும் கைத்தொழில் வடிவமைப்பு போன்ற ஏனைய விண்ணப்பங்களையும் பதிவுசெய்வார்கள். (முகவர்கள் பட்டியலைப் பார்க்கவும்)

புலமைச் சொத்து என்றால் என்ன?

புலமைச் சொத்து என்பதன் கருத்து மனிதனுடைய மூளையினால் உருவாக்கப்பட்ட ஆக்கம் ஒன்றிற்கான உரிமை என்பதாகும். இது பொதுவாக பின்வரும் உரிமைகளை உள்ளடக்குகின்றது.

  • நாவல்கள், கவிதைகள் மற்றும் நாடகங்கள், திரைப்படங்கள், இசை படைப்புகள், கணனி நிகழ்ச்சித்திட்டங்கள், தரவுத் தலங்கள், ஓவியங்கள், சித்திரங்கள், புகைப்படங்கள், சிற்பங்கள் மற்றும் கட்டிடகலை வடிவமைப்புகள் போன்ற இலக்கிய மற்றும் கலை படைப்புகள்;
  • அரங்கக்காட்சி கலைஞர்களின் அரங்கக் காட்சிகள், ஒலிப்பதிவுகள் மற்றும் ஒலிபரப்புகள்;
  • புத்தாக்கங்கள்;
  • கைத்தொழில் வடிவமைப்புகள்;
  • வியாபாரச் சின்னங்கள், சேவை சின்னங்கள், வியாபாரப் பெயர்கள், பதவிகள்;
  • நியாயமற்ற போட்டிகளுக்கு எதிரான பாதுகாப்பு மற்றும்
  • ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுகளின் மாதிரி வடிவங்கள், புதிய வகை தாவரங்கள் (தாவரங்களைப் பயரிடுவோரின் உரிமைகள்), புவியியல் குறிகாட்டிகள் வியாபார இரகசியங்கள் உள்ளிட்ட வெளியிடப்படாத தகவல்கள் போன்ற அனைத்து விஞ்ஞான, கைத்தொழில், இலக்கிய மற்றும் கலைத் துறைகளின் ஏனைய அனைத்து உரிமைகள்.

புலமைச் சொத்து மரபுரீதியாக இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. (i) கைத்தொழில் சொத்து, இதில் புத்தாக்கங்களுக்கான ஆக்கவுரிமை, வியாபாரச் சின்னங்கள் மற்றும் சேவை சின்னங்கள், கைத்தொழில் வடிவமைப்பு மற்றும் புவியியல் குறிகாட்டிகள் என்பவை உள்ளடங்குகின்றன. (ii) பதிப்புரிமை, இதில் இலக்கியம் மற்றும் கலைப் படைப்புகள் உள்ளடங்குகின்றன. அரங்கக் காட்சி கலைஞர்கள், ஒலிப்பதிவு தயாரிப்பாளர்கள் மற்றும் ஒலிபரப்பு அமைப்புகள் என்பவற்றுடன் தொடர்புடைய உரிமைகள் அல்லது அயல் உரிமைகள் என்பவை உள்ளடங்குகின்றன.

புலமைச் சொத்து உரிமைகள் ஏனைய சொத்து உரிமைகள் பண்புகளுடன் பகிர்ந்துகொள்கின்றன - அவற்றை சொந்தமாக்கிக்கொள்ள முடியும், தனிமைப்படுத்த முடியும், அவற்றிற்கு அனுமதிப் பத்திரமளிக்க முடியும். ஓர் ஆக்கவுரிமை வியாபார சின்னம் அல்லது பதிப்புரிமை என்பவற்றின் சொந்தக்காரராக அல்லது உருவாக்குனராக அவருடைய சொந்த உருவாக்கத்திலிருந்து நன்மை பெறுவதற்கு அவர்கள் அனுமதிக்கின்னறனர். இந்த உரிமைகள் புலமைச் சொத்து மீதான பல் சர்வதேச சமவாயங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

புலமைச் சொத்து மேம்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுவது ஏன்?

மனித உருவாக்கங்கள் மனித நாகரீகத்தின் அத்திவாரமாக இருக்கின்றமை, முன்னேற்றம், நல்வாழ்வு போன்ற வலுவான காரணங்கள் இருக்கின்றன. உருவாக்க முயற்சியைப் பாதுகாப்பது என்பது மேலும் உருவாக்கத்தை ஊக்கப்படுத்துகின்றது, முதலீடுகளை உயர்த்துகிறது, தொழில்நுட்ப மாற்றங்களை ஊக்குவிக்கிறது மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுகிறது, புதிய கைத்தொழில்களையும் தொழில் வாய்ப்புகளையும் உருவாக்குகின்றது. அத்துடன் வாழ்க்கைத்தரத்தையும் வாழ்க்கையின் மகிழ்ச்சியையும் மேம்படுத்துகின்ற அதேநேரத்தில் வினைத்திறன்மிக்க சமத்துவமான புலமைச் சொத்து முறைமை பயனுறுதிமிக்க வகையில் பொருளாதாரம், தொழில்நுட்பம், சமூக கலாசார அபிவிருத்தி என்பவற்றுக்குப் பங்களிப்புச் செய்கின்றது. புலமைச் சொத்து உருவாக்குனர்களின் உரிமைகளுக்கும் முழு சமூகத்தின் ஆர்வத்திற்கும் இடையில் ஒரு சமநிலையைப் பேணுவதற்கு முயற்சியெடுக்கிறது. அந்தவகையில் அனைவரின் நன்மைக்காக உருவாக்கத்தில் மனித முயற்சி முக்கியத்துவம் பெறுகின்ற ஒரு சூழலை அறிமுகப்படுத்துகின்றது.

சர்வதேச பரிமாணங்கள்

உலக புலமைச் சொத்து அமைப்பு (WIPO), ஐக்கிய நாடுகள் அமைப்பில் ஒரு விசேட முகவராகத் திகழ்கிறது. அதன் பணிப்பாணையில் அனைத்து அங்கத்துவ நாடுகளின் புலமைச் சொத்து உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவது உள்ளடக்கபட்டுள்ளது. உலக புலமைச் சொத்து அமைப்பு தற்பொழுது புலமைச் சொத்து மீது 26 சர்வதேச சமவாயங்களை நிர்வகிக்கிறது. 2017 சனவரி 01ஆம் திகதியன்று உலக புலமைச் சொத்து அமைப்பில் 189 அங்கத்துவ நாடுகள் இருக்கின்றன. உலக புலமைச் சொத்து அமைப்பின் தலைமை அலுவலகம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ளது. அதன் இணையத்தளம் : http://www.wipo.int.

மேலும், புலமைச் சொத்தின் குறிப்பிட்ட பகுதிகளை நிர்வகிக்கின்ற ஏனைய சர்வதேச அமைப்புகள் இருக்கின்றன. அவையாவன, யுனெஸ்கோ, (சர்வதேச பதிப்புரிமை சமவாயம்), உலக வர்த்தக அமைப்பு (புலமைச் சொத்து உரிமைகளின் வர்த்தகத்துடன் தொடர்புடைய விடயங்கள் அடங்கிய உடன்படிக்கை - TRIPS உடன்படிக்கை) மற்றும் புதியவகை தாவரங்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியம் (புதியவகை தாவரங்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயம்)

இலங்கையில்

இலங்கையில் தற்போது புலமைச் சொத்து முறைமை 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்து சட்டத்தின் மூலம் நிருவகிக்கப்படுகிறது. இதில் பல்வேறு புலமைச் சொத்து உரிமைகள் மற்றும் அவர்களின் கைப்பற்றுதல், முகாமைப்படுத்துதல், வலியுறுத்தி நடைமுறைப்படுத்துதல் என்பவற்றிற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றது. இலங்கையில் இந்த சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள  தேசிய புலமைச் சொத்து அலுவலகம் ஓர் அரசாங்கத் திணைக்களமாகும். இது இலங்கையில் புலமைச் சொத்து முறைமைகளை நிர்வகிக்கும் பொறுப்புக்களை வகிக்கின்றது.

சமீபத்திய செய்திகள்