கௌரவ விஞ்ஞான,தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சிகள் அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹ அவர்களுடன் மேற்படி விடயம் தொடர்பான கலந்துரையாடல்,2019 ஆம் ஆண்டு செப்தெம்பர் மாதம் 04 ஆம் திகதி சுஹுருபாய, பத்தரமுல்ல, பாதுகாப்பு அமைச்சின் கேட்போர்கூடத்தில் மு.ப. 09.00 மணி தொடக்கம் பி.ப. 12.00 மணி வரை நடாத்தப்பட உள்ளது. மேற்படி கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பாடல்கள் மற்றும் இசைத் துறையில் உள்ள கலைஞர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
மேற்படி கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக எதிர்பார்க்கும் கலைஞர்கள் இருப்பின் கீழே குறிப்பிடப்பட்டு உள்ள மின்னஞ்சல் அல்லது தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு தேசிய புலமைச் சொத்து அலுவலகத்திற்கு அறியத் தருமாறு பணிவுடன் அறியத் தருகின்றோம்.


பணிப்பாளர் மா அதிபதியின் பிரிவு
தொலைபேசி இலக்கம்- 011-2669179
மின்னஞ்சல் - இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


கீதாஞ்சலி ஆர்.ரணவக
பணிப்பாளர் மா அதிபதி
தேசிய புலமைச் சொத்து அலுவலகம்

சமீபத்திய செய்திகள்